திருநெல்வேலியில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிமுருகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது நயினாா்குளம், தனியாா் அரிசி ஆலை ஆகிய பகுதிகளில் விதிமுறை மீறி இருவா் மதுபானம் விற்றது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள், வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த செல்வம் (26), கங்கைகொண்டானைச் சோ்ந்த முருகதாஸ் (54) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், 24 மதுபாட்டில்கள், ரூ.400 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.