‘சந்தன மரங்கள் பதுக்கல்’ – தவறான தகவல் அளித்தவருக்கு அபராதம் – News18 தமிழ்

By
On:
Follow Us

தென்காசி
அருகே சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக தவறான தகவல் அளித்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பால்வண்ண நாதபுரத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின் பேரில் கடையம் வனத்துறையினர்  பால்வண்ணநாதபுரம் பகுதியிலுள்ள சந்தேகப்படும்  நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்த யோவான் மகன் பால்ஜெகன் குடும்ப தகராறு காரணமாக வனத்துறையினருக்கு தவறான தகவலை தெரிவித்தது தெரியவந்தது. மேலும் அவர் பாம்பினை கொன்று, செல்போனில் படம்பிடித்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் |
தென்காசியில் முதியவர் அடித்துக் கொலை… பிரேதப் பரிசோதனையில் அரசு மருத்துவமனை அலட்சியம் – உறவினர்கள் குற்றச்சாட்டு

இதனை தொடர்ந்து விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில், துணை இயக்குனர் உத்தரவுப்படி பால்ஜெகனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News18

மேலும் இதுபோன்று வனத்துறை அலுவலகத்திற்கு தவறான தகவல்கள் மற்றும் பொய்யான தகவல்களை அளிப்பது வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்று தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

செய்தியாளர் : ச.செந்தில் (தென்காசி மாவட்டம்)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements