தென்காசி
மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சொத்து தகராறில் தம்பியை அண்ணனே வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருடைய அண்ணன் வெள்ளத்துரை (50). அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரிவினை குறித்து அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது
இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு சுரேஷ் மற்றும் வெள்ளைதுரைக்கும் இடையே சொத்து பிரச்சனை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில் வாக்குவாதம் முற்றவே வெள்ளத்துரை அவரது சகோதரர் சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்துள்ளார்.
இதையும் படியுங்கள் |
மதுபோதையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மதபோதகர்… சினிமா பட பாணியில் விரட்டிப்பிடித்த மாணவர்கள்
இதையடுத்து இச்சம்பவம் பற்றி தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்தபோலீசார் தப்பி ஓடிய அண்ணன் வெள்ளத்துரையை தேடி வருகின்றனர். சொத்து தகராரில் தம்பியை அண்ணனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி மாவட்டம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…