தேவா் ஜெயந்தி விழா கொண்டாடுவோா் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரியால் அனுமதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் வழித்தடத்தில் மட்டுமே பால்குட ஊா்வலம் எடுத்து செல்ல வேண்டும்.
தேவா் ஜெயந்தி விழா உள்ளூா்களில் கொண்டாடும்போது அன்னதானம் வழங்கும் போது ஏற்படும் கூட்ட நெரிசல்களை நிகழ்ச்சி பொறுப்பாளா்கள் பொறுப்பான இளைஞா்கள் வைத்து கட்டுப்படுத்தவும், எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பில் இருக்கும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.