திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் மனபிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட 17 வயதான மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். மாணவர் செய்கைகள் செல்போனில் கேம்ஸ் விளையாடுவது போலவே நேரிலும் செய்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த செய்கைகளை அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக வளைதளத்தில் வேகமாக பரவிய இந்த காணொளி குறித்து காவல் துறையினரும் ஒரு பக்கம் விசாரணையை தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக மனநலம் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியதால் இந்த மனப்பிறழ்வு நோய்க்கு ஆளானது மருத்துவர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நள்ளிரவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர் அதிகாலை வேளையில் மருத்துவமனை ஊழியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் எதுவும் தெரிவிக்காமல் மாணவர் தப்பிச் சென்றுள்ளார். சமூகவலைத்தளத்தில் பரவிய காணொளி குறித்து மருத்துவமனையில் விசாரணை நடத்திய காவல் துறையிடம் இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செல்போன் கேம்ஸ்களால் பாதிக்கப்பட்ட மாணவனது செய்கை காணொளியை பார்க்கும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைய செய்தது மட்டுமின்றி மாணவர்களிடையே செல்போன் கேம்ஸ்கள் தொடர்ச்சியாக விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழலையும் உணர்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…