நல்லிணக்கம், ஒற்றுமையை வளர்க்கும் கும்பமேளா – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் | PM Modi mentioned Maha Kumbh in 2025 first Mann Ki Baat

By
On:
Follow Us

புதுடெல்லி: வட​மாநிலங்​களில் நடைபெறும் கும்​பமேளா, தென் மாநிலங்​களில் நடைபெறும் புஷ்கரம் ஆகிய நிகழ்வுகள் சகோதரத்து​வம், நல்லிணக்​கம், ஒற்றுமையை வளர்க்​கின்றன என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார்.

மாதம்​தோறும் ‘மனதின் குரல்’ (‘மன் கீ பாத்’) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். நேற்று ஒலிபரப்பான 118-வது நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: ஒவ்வொரு மாதத்​தின் கடைசி ஞாயிறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் உங்களை சந்தித்து வருகிறேன். இந்த மாதத்​தின் கடைசி ஞாயிற்றுக்​கிழமை குடியரசு தினம் கொண்​டாடப்​படு​கிறது. அதனால், ஒரு வாரம் முன்ன​தாகவே உங்களுடன் பேசு​கிறேன்.

இது இந்திய குடியரசின் 75-வது ஆண்டாகும். அரசி​யலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நேரத்​தில் அம்பேத்​கர், நாட்​டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோரது வழிகாட்டு​தல்களை நாம் பின்​பற்றி நடக்க வேண்​டும்.

தேசிய வாக்​காளர் தினம் வரும் 25-ம் தேதி கொண்​டாடப்பட உள்ளது. இந்த நாளில்​தான் இந்திய தேர்தல் ஆணையம் அமைக்​கப்​பட்​டது. கடந்த 1951-52-ம் ஆண்டில் முதல்​முறையாக தேர்தல் நடந்த​போது, மக்களாட்சி நிலைத்​திருக்​குமா என்று சிலர் சந்தேகம் எழுப்​பினர். இன்று ஜனநாயகத்​தின் தாயாக பாரதம் உருவெடுத்​துள்ளது. தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி நேர்​மையாக தேர்​தல்களை நடத்தி வரும் தேர்தல் ஆணையத்​துக்கு வாழ்த்துகள்.

உத்தர பிரதேசத்​தின் பிரயாக்​ராஜில் மகா கும்​பமேளா நடைபெற்று வருகிறது. அங்கு மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. சமத்து​வம், சகோதரத்து​வம், ஒற்றுமை​யின் சங்கமமாக கும்​பமேளா திகழ்​கிறது. பாரத மக்கள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் குவிந்து வருகின்​றனர். தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்​டின் அனைத்து திசைகளில் இருந்​தும் மக்கள் வருகின்​றனர். இந்த விழா​வில் எங்கும், எதிலும் வேறு​பாடு இல்லை, சாதிபேதம், ஏழை – பணக்​காரர்கள் பேதமின்றி அனைவரும் திரிவேணி சங்கமத்​தில் புனித நீராடு​கின்​றனர்.

பிரயாக்​ராஜ், உஜ்ஜைனி, நாசிக், ஹரித்​வாரில் கும்​பமேளா நடப்​பதுபோல தெற்​கில் கோதாவரி, கிருஷ்ணா, நர்மதை, காவிரி நதிகளின் கரைகளில் புஷ்கரம் நடக்​கின்றன. நமது நதிகளோடு மக்களின் நம்பிக்கைகள் பின்னிப்பிணைந்​துள்ளன. கும்​பகோணம் தொடங்கி திருக்​கடையூர், குடவாசல், திருச்​சேறை வரை பல்வேறு கோயில்கள் கும்பத்​தோடு தொடர்​புடையதாக இருக்​கின்றன. கும்​பமேளா, புஷ்கரம், கங்கா சாகர மேளா ஆகிய நிகழ்வுகள் சகோதரத்து​வம், நல்லிணக்​கம், ஒற்றுமையை வளர்க்​கின்றன.

விண்​வெளி துறை​யில் சாதனை: இந்த 2025-ம் ஆண்டின் தொடக்​கத்​திலேயே விண்​வெளி துறை​யில் பல்வேறு சரித்திர சாதனைகளை பாரதம் படைத்​துள்ளது. பெங்​களூருவை சேர்ந்த ஸ்டார்ட்​-அப் நிறு​வனமான ‘பிக்​ஸல்’, 3 செயற்​கைக் கோள்கள் அடங்கிய தொகுப்பை வெற்றிகரமாக விண்​ணில் செலுத்தி உள்ளது. இதன்​மூலம் பூமியை மிக துல்​லியமாக படம் எடுக்க முடி​யும். இது ஒரு புதிய சாதனை. அதேபோல, விண்​வெளி​யில் 2 விண்​கலன்களை ஒருங்​கிணைத்து இஸ்ரோ விஞ்​ஞானிகள் மாபெரும் சாதனை படைத்​துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து 4-வது நாடாக பாரதம் இந்த சாதனையை செய்​துள்ளது.

விண்​வெளி நிலையம் அமைப்பது தொடர்பாக சென்னை ஐஐடி எக்ஸ்​டெம் மையம் தீவிர ஆராய்ச்​சி​யில் ஈடுபட்டு வருகிறது. 3டி கட்டிடங்​கள், உலோக நுரைகள், கண்ணாடி ஒளி இழைகள் குறித்​தும் இந்த மையம் ஆய்வு மேற்​கொண்டு வருகிறது. தண்ணீர் இல்லாமல் கான்​கிரீட் கட்டு​மானங்களை கட்டுவது குறித்​தும் ஆய்வு நடத்தி வருகிறது.

ககன்​யான் திட்டம் மற்றும் விண்​வெளி நிலையம் அமைக்க இந்த மையத்​தின் ஆய்வு உறுதுணையாக இருக்​கும். அசாமின் நவுகான் பகுதி​யில் பயிர்களை யானை கூட்டம் நாசம் செய்து வந்தது. இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண, யானைக்கு மிகவும் பிடித்​தமான நேப்​பியர் ரக புற்களை அங்கு உள்ள வறண்ட பூமி​யில் மக்கள் வளர்த்​தனர். இதன்​பிறகு, பயிர்கள் சேதமடைவது கணிசமாக குறைந்​து​விட்​டது.

ஸ்டார்ட்​-அப் செங்​கல்​பட்டு: தற்போது சிறிய நகரங்​களி​லும் ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்கள் தொடங்​கப்​பட்டு வருகின்றன. குறிப்பாக செங்​கல்​பட்டு, அம்பாலா, ஹிஸார், காங்க்டா, பிலாஸ்​பூர், குவாலியர், வாஷிம் போன்ற நகரங்​கள் ஸ்​டார்ட்​-அப் மை​யங்​களாக ​மாறி வரு​கின்றன. ஜனவரி 23-ம் தேதி நே​தாஜி பிறந்​தநாள், பராக்​கிரம ​தினமாக ​கொண்​டாடப்பட உள்​ளது. பாரத இளைஞர்​கள் அவரை பற்றி அதிகம் படிக்க வேண்​டும், அவரது வாழ்க்கை​யில் இருந்து உத்​வேகம் பெற வேண்​டும்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1347594' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements