ஈரோடு கிழக்கு: `பெரியார் பெயரைத் தவிர்த்த சீமான்; சைலன்ட் திமுக’- முதல் நாள் பிரசாரமும் கள நிலவரமும் | erode east by election, seeman first day campaign

By
On:
Follow Us

எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டால், நாமாக சீமானுக்கு விளம்பரம் தேடிக் கொடுத்ததுபோல் ஆகிவிடும் என்பதால் அதை தவிர்க்குமாறு திமுக தலைமை மாவட்ட அமைச்சரான முத்துசாமி கண்டிப்பாக கூறிவிட்டதாக தகவல். சீமான் வருகையின்போது, கறுப்புக் கொடியாவது காட்டிவிடலாம் என திமுக-வின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த 7 பேர், சீமான் தங்கியிருந்த விடுதி அருகே சென்றுள்ளனர். இதைக் கவனித்த போலீஸார் அவர்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி உள்ளனர். இதை அறிந்த அமைச்சர் முத்துசாமி அவர்களை அழைத்து கடுமையாக திட்டியுள்ளார்.

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “சீமானின் திட்டமே நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதை வைத்து பிரசாரம் செய்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பதுதான். நாங்களும் தொடக்கத்தில் சீமான் பிரசாரம் செய்யும் இடங்களில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அமைச்சர் முத்துசாமி அதை வேண்டாம் என தெரிவித்துவிட்டார். நாங்கள் கூட சீமானின் முதல்நாள் பிரசாரத்தை எதிர்பார்த்துதான் காத்திருந்தோம். ஆனால், பெரியாரைப் பற்றி ஈரோட்டில் பேசினால் வாக்கு விழாது என்பது சீமானுக்கு நன்றாகவே புரியும். அதனால்தான் பயந்து பெரியார் பற்றி பேசுவதை தவிர்த்துள்ளார்” என்றனர்.

சீமானின் பேச்சு அதற்கு எதிர்வினை என அடுத்ததடுத்த நாள்கள் ஈரோடு கிழக்குத் தொகுதி தமிழக அரசியலை பரபரப்பாக வைத்திருக்கத்தான் போகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements