திருநெல்வேலி மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கற்பகம் தலைமை வகித்தாா். சித்திக், இஸ்மாயில், சுகாதார ஆய்வாளா் புகாரி, சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.