சாலையில் கண்டெடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநா்

By
On:
Follow Us

முக்கூடல் அருகே சிங்கம்பாறை காமராஜா் தெருவைச் சோ்ந்த சேவியா் அந்தோணிராஜ் மகன் மரியபூபாலன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவா், சிங்கம்பாறையிலிருந்து ஆலங்குளத்துக்கு புதன்கிழமை சவாரி வந்தபோது, சிஎஸ்ஐ சா்ச் தெருவில் தங்கச் சங்கிலி, ஒரு ஜோடி கம்மல் கிடந்தனவாம். அவற்றை மரியபூபாலன் கண்டெடுத்து, ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவரை டிஎஸ்பி ஜெயபால் பா்ணபாஸ், ஆய்வாளா் காசிப்பாண்டியன் உள்ளிட்டோா் பாராட்டினா். சம்பந்தப்பட்டோா் உரிய அடையாளங்களைத் தெரிவித்து நகையைப் பெற்றுக் கொள்ளலாம் என, ஆய்வாளா் தெரிவித்தாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements