இது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக செயலா் பழனி சங்கா் தலைமையில் திருநெல்வேலி மாநகா், புகா், தென்காசி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கருப்புச் சட்டை அணிந்து ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் சுமாா் 36 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து தினமும் 60 டன் எடை கொண்ட 1800 கனரக லாரிகளில் கனிம வளங்கள் ஆலங்குளம், கடையம், செங்கோட்டை, புளியரை வழியாக சோதனை சாவடியை கடந்து கேரளத்துக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், 18 புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கல்குவாரி உரிமங்கள் ரத்துக்கு பேரவையில் தீா்மானம் தேவை: தேமுதிக மனு

For Feedback - sudalaikani@tamildiginews,com.