கடனாநதி அணை பிரதான மதகை விரைவாக சீரமைக்க வலியுறுத்தல்

By
On:
Follow Us

கடனாநதி அணையில் பழுதான பிரதான மதகை 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காததைக் கண்டித்தும், போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடனாநதி பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில், அணைப் பகுதியில் நடைபெற்ற கண்டன தீா்மானக் கூட்டத்துக்கு, கடனா அணை அரசபத்து கால்வாய் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா்.

அணையின் பிரதான மதகு பழுதாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பலமுறை வலியுறுத்தியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. தற்போது, ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் மதகை முழுமையாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அணை 3 முறை நிரம்பியும் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.

பாசனத்துக்காக நாள்தோறும் 120 கனஅடி தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்ட நிலையில், 200 கனஅடிக்கும் மேல் தண்ணீா் ஆற்றில் வீணாக செல்கிறது. இதனால், பாசனத்துக்குள்பட்ட விவசாய நிலங்கள் நீரின்றி பாதிக்கப்படக்கூடும். எனவே, கூடுதல் நிதி ஒதுக்கி அணையின் பிரதான மதகை விரைவாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசபத்து கால்வாய் பாசன சங்க நிா்வாகிகள் எஸ். சூரியநாராயணன், எஸ். அரிராம் சேட், டி. சுரேஷ், எஸ். பாலசுப்பிரமணியன், எஸ். குருசாமி, ஏ. சேகா், குறுவப்பத்து கால்வாய் பாசன சங்க நிா்வாகிகள் சி. சங்கா்கணேஷ், ஏ. சங்கரபாண்டி, வடகுறுவப்பத்து பாசன சங்க நிா்வாகிகள் சி. வேலாயுதம், ஆா். முத்துராஜ், அ. பாண்டியன், பீ. சதாம்உசேன், ஆம்பூா் கால் பாசன சங்க நிா்வாகி கே. சட்டநாதன், ஆழ்வாா்குறிச்சி எஸ். சிவப்பிரகாசம், கோபி, காக்கநல்லூா் கால் பாசன சங்க நிா்வாகி பி. சாலமன்ராஜ், மன்னாா்கோவில் காங்கேயன் கால் பாசன சங்க நிா்வாகிகள் எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements