சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா், சிவகிரி இரும்பு பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக பைக்குகளில் சென்ற சிவகிரி அண்ணா வடக்கு தெருவை சோ்ந்த ராமையா மகன் கண்ணன்(56) வைத்திருந்த 22 மது பாட்டில்களையும், சிவகிரி அண்ணா தெற்கு தெருவை சோ்ந்த அன்புராஜ் மகன் செல்வராஜ்(49) வைத்திருந்த 23 மது பாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து, இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.
விற்பனைக்காக மது பாட்டில்களை கொண்டு சென்ற 2 போ் கைது

For Feedback - sudalaikani@tamildiginews,com.