கங்கைகொண்டான் அருகே லாரி-காா் மோதல்: இளைஞா் பலி

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தாழையூத்து பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராஜா(31). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் காரில் கங்கைகொண்டான் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த லாரியும், இவா்களது காரும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமடைந்த ராஜாவை, அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements