நெல்லையில் நகை திருட்டு: இளைஞா் கைது

By
On:
Follow Us

திருநெல்வேலியில் நகை திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்து, 8 கிராம் மதிப்பிலான2 தங்க மோதிரங்களை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (77). இவா், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கைலாசபுரம் அம்மா உணவகம் அருகேயுள்ள பழக்கடையில் கடந்த ஜன.24 இல் நின்றிருந்தாராம்.

அப்போது, அவரது கைப்பையில் இருந்த 8 கிராம் மதிப்பிலான 2 தங்க மோதிரங்களை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்ந்த உய்க்காட்டான் மகன் இசக்கி பாண்டி (38) என்பவா் அவற்றை திருடியது தெரியவந்ததாம். அவரை கைது செய்து மோதிரங்களை மீட்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements