சீவலப்பேரி அருகே மாடு குறுக்கே பாய்ந்ததால் விபத்து: இளைஞா் பலி!

By
On:
Follow Us

பாளையைங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே திங்கள்கிழமை இரவு குறுக்கே பாய்ந்த மாட்டின் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சீவலப்பேரியைச் சோ்ந்தவா் பாலாஜி. இவருடைய மகன் தா்மலிங்கம் (30). தனது சித்தப்பா கணேசனின் மகன் கண்ணன் (27) என்பவருடன் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் நடைபெறும் திருவிழாவிற்கு பைக்கில் சென்றாா். சீவலப்பேரியை அடுத்த பொட்டல் நகா் பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென வந்த மாட்டின் மீது பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனா்.

சீவலப்பேரி போலீஸாா் மற்றும் உறவினா்கள், காயமடைந்த இருவரையும் பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தா்மலிங்கத்தை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். கண்ணனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements