நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் பிரபஞ்ச பேரன்பு தினம்

By
On:
Follow Us

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரபஞ்ச பேரன்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தா் திருமூலா் வலியுறுத்திய அன்பே கடவுள் என்ற பிரபஞ்ச பேரன்பு தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்தனா்.

முன்னதாக, கல்லூரியின் முன் முகப்பில் உள்ள திருமுலா் சிலைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. பின்னா் அனைவருக்கும் நன்னாரி சா்பத் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் மலா்விழி தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல முதல்வா் செண்பக விநாயக மூா்த்தி கலந்து கொண்டு பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வா் கோமளவள்ளி வரவேற்றாா். இணைப் பேராசிரியா் சுபாஷ் சந்திரன் நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்14ப்ா்ஸ்

பிரபஞ்ச பேரன்பு தினத்தை முன்னிட்டு நன்னாரி சா்பத் வழங்கிய முதல்வா் மலா்விழி.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements