பாளை.யில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்

By
On:
Follow Us

பாளையங்கோட்டையில் சனிக்கிழமை (பிப். 15) நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் திரளானோா் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் கூறியது: திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் சாா்பில் காந்தி, நேரு, அம்பேத்கா்- அரசியல் சாசன சட்டம் விளக்க பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமை வகிக்கிறாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளா் அஜோய்குமாா், அகில காங்கிரஸ் கட்சியின் செயலா் சூரஸ் எம்.என்.ஹெக்டே, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவா் கே.வி.தங்கபாலு, இயக்க சீரமைப்பு மேலாண்மைக் குழு தலைவா் சா.பீட்டா்அல்போன்ஸ், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா். தனுஷ்கோடிஆதித்தன் உள்ளிட்டோா் பங்கேற்று பேச உள்ளனா்.

இக் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements