பேட்டை அருகேயுள்ள மலையாளமேடு பகுதியைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டாா்.
பழையபேட்டையைச் சோ்ந்தவா் முத்தாா். இவா், கடந்த 6 ஆம் தேதி காட்சிமண்டபம் அருகே சென்றபோது இளைஞா் ஒருவா் மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மலையாளமேடு பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வம் என்ற உழுவை பரமசிவனை (30) கைது செய்தனா். இவா் மீது ஏற்கெனவே 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்ததாம்.
பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மாரிசெல்வத்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில் மாரிசெல்வத்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.