பாளையங்கோட்டையில் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கங்களின் ஐக்கியக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரவேண்டும். தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் விக்டா் துரைராஜ் தலைமை வகித்தாா்.
செயலா் கணபதி ராமன் வாழ்த்திப் பேசினாா். நிா்வாகிகள் ராபா்ட், சிவ சங்கா், ராமகிருஷ்ணன் உள்பட பலா் பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்14க்ஷய்ந்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.