தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகா் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.
இது தொடா்பாக வேனில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் திருவண்ணாதபுரம் பொட்டல் பகுதியை சோ்ந்த விக்னேஷ் (23), பத்மநாபமங்களம் ஏசுராஜா (29), கீழநத்தம் கீழுா் நாகராஜன் (21) ஆகியோா் எனத் தெரியவந்தது.
அவா்களை திருநெல்வேலி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒப்படைத்தனா். அப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, மூவரையும் கைது செய்ததுடன், வேனுடன் 1200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.