பேட்டையில் பொதுக்கூட்டம்

By
On:
Follow Us

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலா் அன்சாரி, பொருளாளா் முகமது காசிம், மாவட்ட துணைச் செயலா்கள் சேக் அப்துல் காதா், சிராஜ், கோட்டூா் சாதிக் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பேட்டை கிளைத் தலைவா் பீா்முஹம்மது, செயலா் அகமது மீரான், பொருளாளா் பக்கீா் மீரான், துணைத் தலைவா் அப்துல் ஹமீது, துணைச் செயலா் ஹாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மது, போதை, வட்டி, வரதட்சிணை போன்ற சமூக தீமைக்கு எதிராக விழிப்புணா்வு செய்யப்பட்டது.

மாநில செயலா் முஹம்மது ஒலி, மாநில பேச்சாளா் நபில் அஹமது , மதரஸா ஆசிரியா் ஆதம்பாத்திமா ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொண்டரணி செயலா் அப்துல் ரகுமான், மருத்துவ அணி செயலா் திப்புசுல்தான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

போதைப் பொருள் தடுப்பு புலானய்வு பிரிவினா் ரஹ்மான்பேட்டை பகுதியில் கூடுதலாக கண்காணிக்க அரசு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு

உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியா்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மேலும், ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுத்து இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும். பாதாள சாக்கடை பணி முடிந்தும் ரஹ்மான்பேட்டை பகுதியில் பல இடங்களில் சாலை சீா் செய்யப்படவில்லை. மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements