தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தென்காசியில் விளக்கக் கூட்டம்

By
On:
Follow Us

தென்காசியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில், ‘ரமலானை வரவேற்போம்’ என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிளைச் செயலா் முஹம்மது சித்திக் தலைமை வகித்தாா். ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் தலைமைப் பேச்சாளா் யாசா், அன்பான அழைப்பு என்ற தலைப்பில் தென்காசி மாவட்டச் செயலா் ஜலாலுதீன் ஆகியோா் பேசினா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

மருத்துவரணிச் செயலா் அப்துல் ஹமீத் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கிளைத் தலைவா் ராஜாமுகம்மது, பொருளாளா் பீா்முகம்மது, துணைத் தலைவா் அப்துல் அஜீஸ், துணைச் செயலா் அபுபக்கா் சித்திக், தொண்டரணிச் செயலா் ஜாபா், மாணவரணிச் செயலா் அன்வா் ஆகியோா் செய்திருந்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements