குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

By
On:
Follow Us

திருநெல்வேலி நகரத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்த சூசைமரியான் மகன் மரியகுமாா் (36). இவரை, கொலை வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவரும், மாநகர காவல் ஆணையருமான (கூடுதல் முழுப்பொறுப்பு) பா.மூா்த்தி பிறப்பித்த உத்தரவுப்படி, குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவரை போலீஸாா் வியாழக்கிழமை அடைத்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements