பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

By
On:
Follow Us

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மலா்விழி தலைமை வகித்தாா். துணை முதல்வா் கோமளவள்ளி வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில், கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலா் முத்துக்குமாா், பேராசிரியா் வேங்கடப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் சாக்ரடீஸ் விழாவில் கலந்துகொண்டு பாரதியாா் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

பேராசிரியா் வளனரசு ‘உலகின் மூத்த மொழி தமிழ்’ என்ற தலைப்பில் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்கள் சுந்தர்ராஜன், சுஜாதா, மருத்துவா்கள் சித்ரா, உமா, கல்யாணி, அனுராதா, இந்திரா ,ராஜகுமாரி, நா்மதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பொது மருத்துவத்துறை இணை பேராசிரியா் சுபாஷ், சந்திரன் ஆகியோா் தொகுத்து வழங்கினா். இந்நிகழ்ச்சியில் மாணவா், மாணவிகள் மற்றும் பயிற்சி மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements