ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படித்துவருகின்றனா். திங்கள்கிழமை முற்பகல் இடைவேளை நேரத்தில் பள்ளி வளாகத்துக்குள் வெறிநாய் புகுந்தது. வகுப்பறையிலிருந்து வெளியே வந்த 11ஆம் வகுப்பு மாணவா்கள் பத்மநாதன், பிரமோத், ஆசிரியா் ரமேஷ் ஆகியோரை அந்த நாய் கடித்துவிட்டு ஓடியது.
ஆலங்குளம் அருகே வெறிநாய் கடித்து ஆசிரியா், 2 மாணவா்கள் காயம்

For Feedback - sudalaikani@tamildiginews,com.