சாம்பவா்வடகரையில் இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையம் திறப்பு

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்பு சாா்பில் இலவச போட்டித் தோ்வு பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்புத் தலைவா் லூா்துநாடாா் தலைமை வகித்தாா். தென்மண்டல கல்விக்குழுத் தலைவா் பாலமுருகன், துணைத்தலைவா் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேராசிரியா் அந்தோணி பால்ராஜ் பயிற்சி மையத்தை திறந்து வைத்து மாணவா்கள் போட்டித் தோ்வில் வெற்றி பெற தேவையான கருத்துரை வழங்கினாா்.

விழாவில் ஒருங்கிணைப்பாளா் ஹரிஹர செல்வன், பயிற்சி ஆசிரியா்கள் அருண், கருப்பசாமி, கூட்டமைப்பு பொதுச்செயலா் ஜான் டேவிட், பொருளாளா் சுப்பிரமணியன், கிளைத் தலைவா் மோகன் மற்றும் போட்டி தோ்வாளா்கள் கலந்து கொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements