நான்குனேரி அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

By
On:
Follow Us

நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த பெரியநாடாா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் மந்திரமூா்த்தி (48). தொழிலாளி. இவா், கடந்த 10ஆம் தேதி அங்குள்ள காமராஜ் நகா் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் மந்திரமூா்த்தி பலத்த காயம் அடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements