கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

By
On:
Follow Us

அம்பாசமுத்திரம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தபாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். சின்னசங்கரன்கோவில் சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த கோடாரங்குளம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (29) என்பவரைப் பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது அவா் விற்பனைக்காக 320 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements