தணிக்கை வாரியம் படத்திற்கு முதலில் யூ சான்றிதழ் வழங்கியிருந்தது. பிறகு படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் படத்தில் சில கட்களை மேற்கொள்ள தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது.
சாதி குறித்தான உரையாடலைக் கொண்ட வாய்ஸ் ஓவரையும், சாதிய அமைப்பை விளக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது.
இதனை தாண்டி படத்தில் சில வசனங்களையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். பிராமண சமூகத்தினரிடமிருந்து வந்த கடிதங்கள் தொடர்பாக நேர்காணலில் பேசிய இயக்குநர் ஆனந்த் மகாதேவன், ” படத்தின் டிரெய்லர் பற்றி சில தவறான புரிதல்கள் இருக்கிறது. படத்தைப் பார்ப்பதில் எந்த தொந்தரவும் இருக்காது என சில சந்தேகங்களை அகற்ற வேண்டியது இருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.