ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி ஆட்டத்தில் மும்பையிடம் போராடி தோற்றது. அதற்கு நேர்மாறாக தொடர் தோல்விகளால் துவண்டுள்ள ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது.
இந்த நிலையில், இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பானதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு தொடரில் தில்லி அணி மிகவும் பலமானதாக இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் இந்த அணி இன்று வென்றால் மீண்டும் முதலிடத்திற்குச் செல்லும்.