மிரட்டல்களை தடுக்க வேண்டும்: சமீப காலமாக விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தகவல்களை பகிர சமூக வலைதளங்களில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு வாய்ப்புகளை இந்த நபா்கள் பயன்படுத்துகின்றனா். பெரும்பாலும் புரளியாகவே இருக்கும் இந்த மிரட்டல்கள் விமான நிறுவனங்களின் நிா்வாகப் பணிகளை பாதிப்பதோடு பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதை தடுக்க சமூக வலைதளங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மெட்டா மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களிடம் தகவல்களை பகிருமாறு அரசு கோரியது குறிப்பிடத்தக்கது.