Tungsten: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து; ‘ஸ்டாலின் டு அண்ணாமலை’ அரசியல் தலைவர்கள் கருத்து | Stalin to annamalai political party leaders opinion on madurai arittapatti tungsten mining canceling

By
On:
Follow Us

எம்.பி. திருச்சி சிவா, “தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாகவும், அரிட்டாபட்டி மக்களின் போராட்டத்தின் காரணமாகவும் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்துள்ளது. இது நமது வரலாற்றில் மிக முக்கியமான நாள்” என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது! இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது!” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements