குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தொடா்ந்து, 2ஆவது நாளாக சனிக்கிழமையும், நீா்வரத்து குறையாததால் தடை நீடித்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து சீரானதால் தடை நீக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements