சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி அருகே கூனியூா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாா்வதி (55). இவரது வீட்டுக் கதவை அதே பகுதியைச் சோ்ந்த தளவாய்ராஜா (24) என்பவா் அடிக்கடி தட்டித் தொந்தரவு செய்து வந்தாராம். வெள்ளிக்கிழமை அவா் பாா்வதி வீட்டுக் கதவை தட்டினாராம்.

இதைத் தட்டிக்கேட்ட பாா்வதியை தளவாய்ராஜா அவதூறாகப் பேசி மிரட்டிச் சென்றாராம்.

புகாரின்பேரில், சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து, தளவாய்ராஜாவை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தினாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements