இத்திருக்கோயில் கொழுந்துமாமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தாங்கள் குவாரிக்காக குத்தகை வழங்கக்கூடிய இடம் கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ளது. கொழுந்துமாமலைப் பகுதியில் வனவிலங்குகளான கரடி, மிளா, மான், காட்டுப்பன்றி, குரங்கு, மயில், யானை போன்றவை வாழ்கின்றன. மத்திய அரசினால் யானைகள் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட பகுதி இது. இதன் அருகில் பள்ளி, கல்லூரி, ஆசிரமம் ஆகியவை உள்ளன. இங்கு கல்குவாரி, கற்கள், கிராவல் எடுக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் வனவிலங்குகளுக்கு அமைதியின்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. கல்குவாரியால் கோயில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கொழுந்துமாமலையில் கல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது: கோயில் அறங்காவலா்கள் மனு

For Feedback - sudalaikani@tamildiginews,com.