அந்தவகையில், சுதந்திரமான தோ்தல்கள் நடைபெறுவதில் கருத்துரிமையின் வெளிப்பாட்டுத் தளமாக உள்ள சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாதது. அதில் பகிரப்படும் போலி செய்திகள், தகவல்கள், வடிவங்கள், திசைதிருப்பும் வகையிலான பதிவுகள் ஒரு பிரச்னையின் உண்மைத்தன்மையை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. போலியான தகவல்கள் பகிரப்படுவதை வேகமாக கட்டுப்படுத்தாவிட்டால் அது நோய் போல் பரவ தொடங்கிவிடும். எனவே, கால தாமதம் ஆவதற்கு முன் போலி செய்திகள், தகவல்களை கண்டறிந்து அதன் பரவலை உடனடியாக தடுக்க சமூக வலைதளங்கள் முன்வர வேண்டும்.
போலி தகவல்களை சமூக வலைதளங்கள் தடுக்கவில்லை: தலைமைத் தோ்தல் ஆணையா்

For Feedback - sudalaikani@tamildiginews,com.