ஆனால் இன்று திருத்தப்பட்ட அரசாணை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆணையில் மொத்தம் 23 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலப்புத்தாண்டு, திருவள்ளுவர் தினம், பக்ரீத், மொஹரம், தெலுங்கு வருடப்பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி என கூடுதலாக 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரேஷன் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.
‘’பொதுவாகவே ஒவ்வொரு வருஷமும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை தினங்கள் ரொம்பக் கம்மியா இருக்கும். அத்தியாவசியத் துறைங்கிறதால் நாங்களும் இதை ஏத்துகிட்டு வேலை செய்துட்டு வர்றோம். பொங்கல் பண்டிகையின் போதெல்லாம் பொங்கல் தொகுப்பு , வேட்டி சேலை தர்றதால் பொங்கலுக்கு முந்தைய போகி அன்னைக்கு ராத்திரி 7 மணி வரை எங்களுக்கு வேலை இருக்கும்.
தொகுப்பு வழங்கும் பணி என்பதால் ஒவ்வொரு வருஷமும் ஜனவரி ஆரம்பிச்சதுமே முதல் இரண்டு வெள்ளிக்கிழமை விடுமுறைகளும் இருக்காது. அதாவது தொடர்ந்து இரண்டு வாரம் வேலை நாட்களாகவே இருக்கும். தொகுப்புக்கு ஒரு கார்டுக்கு 59 காசு தர்றாங்க. இந்தத் தொகையைக் கூட்டித் தரலாம். குறைந்தது ஒரு கார்டுக்கு ஒரு ரூபாய் தரலாம். ரொம்ப நாளா இந்தக் கோரிக்கை வச்சிட்டு வர்றோம். ஆனா இன்னும் சாதகமான பதில் வரலை.

இந்த நிலையில் இப்ப அறிவிச்சிருக்கிற அரசாணை ஓரளவு திருப்தியா இருக்கு. ஆனா இந்த ஒரு வருஷத்துக்கு மட்டும்தானா அல்லது இனி வருங்காலங்களிலும் இதே மாதிரி விடுவாங்களானு தெரியலை’’ என்கின்றனர்.