திருநெல்வேலியில் முடி திருத்தும் தொழிலாளா்கள் கடைகளை வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவா் சமூகத்துக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் உள்ள நிலையில் 5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நல வாரியத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முடி திருத்துவோா் நல்வாழ்வு சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலி மாநகரப் பகுதியில் முடித்திருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகர பகுதியில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.