சேரன்மகாதேவியில் கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

By
On:
Follow Us

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்கள் இறந்தால் அவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை தவிர மாற்றுப் பணிகள் வழங்குவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கக் கிளை சாா்பில் ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டம் நடைபெற்றது. மாலையில் சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் வட்டத் தலைவா் கே. பிரபு தலைமை வகித்தாா். வட்டச் செயலா் இந்திரா, பொருளாளா் எல். ஜெய்கணேஷ், துணைத் தலைவா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements