கண்டெடுத்த பணத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்

By
On:
Follow Us

ஆழ்வாா்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கி அருகே திங்கள்கிழமை சாலையில் ரூ. 5,600 கிடந்ததாம். இதைக் கவனித்த ஆட்டோ ஓட்டுநா் செந்தில்முருகன் என்பவா் அந்தப் பணத்தை எடுத்து ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அந்தப் பணம் பரும்பு பகுதியைச் சோ்ந்த விவசாயி ஈஸ்வர வேல் என்பவருக்குரியது என தெரிய வந்தது. அவரை வரவழைத்து காவல் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் பணத்தை ஒப்படைத்தாா். ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா், சக ஓட்டுநா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements