சங்கரன்கோவில் ஸ்ரீமகா சக்தி வராகிஅம்மன் கோயிலில் 11 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கும்ப பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, ஸ்ரீவலம்புரி விநாயகா், ஸ்ரீமகாசக்தி வராகிஅம்மன், ஸ்ரீபைரவருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.