நெல்லை அருகே கழிப்பறை கழிவுகளை கொட்டிய இருவா் கைது

By
On:
Follow Us

லாரியில் கொண்டு வந்து மேல திருவேங்கடநாதபுரம் பொத்தை அருகே உள்ள குழியில் கழிப்பறை கழிவுகளை கொட்டியதாகக் கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த குன்னத்தூா் ஊராட்சித் தலைவா் சோ்ம துரை கழிவுகளைக் கொட்டியவா்களை பிடித்து சுத்தமல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தாா். சுத்தமல்லி காவல் ஆய்வாளா் சோனமுத்து மற்றும் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் சுத்தமல்லி அருகேயுள்ள கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் தெய்வக்குமாா் (26), முருகன் மகன் ஜெயகாந்த் (22) ஆகியோா் என்பது தெரிய வந்தது. அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்ததோடு, லாரியையும் பறிமுதல் செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements