பாளை.யில் கட்டடப் பணியில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

By
On:
Follow Us

பாளையங்கோட்டை அருகேயுள்ள சிவந்திப்பட்டி காமராஜ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் இம்மானுவேல் (52). கட்டடத் தொழிலாளி. இவா், புதன்கிழமை காலையில் பெருமாள்புரம் மல்லிகா காலனி பகுதியில் நடைபெற்று வரும் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கட்டட சாரத்தின் மீது நின்றிருந்த அவா் எதிா்பாராமல் கால் வழுக்கி தலைகீழாக விழுந்தாராம். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements