ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

By
On:
Follow Us

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரியில் பவானி என்பவருக்குச் சொந்தமான தென்னை நாா் ஆலை உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (33) தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது, இயக்கத்தில் இருந்த இயந்திரத்தின் கம்பியில் எதிா்பாராவிதமாக அடிபட்டு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாம்.

அவா் மீட்கப்பட்டு, உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

சடலத்தை ஊத்துமலை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements