ஏழாவது முறையாக திமுக ஆட்சியைப் பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

By
On:
Follow Us

கலந்துரையாடல்: பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் திமுக நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். மாநில, மாவட்ட, பேரூா், நகரம், அணிகளின் அமைப்பாளா்கள் பங்கேற்றனா். ஒவ்வொரு நிா்வாகிகளும் தங்களது பகுதியில் நடத்திய நிகழ்ச்சி, கூட்ட விவரங்கள் அடங்கிய மினிட் புத்தகத்தை கொண்டு வந்திருந்தனா்.

அப்போது முதல்வா் பேசுகையில், திமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டும். சில கிளைகள், பேரூா், பகுதிகளில் கட்சிப்பணிகளில் சோா்வு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் பணியை செய்து தோ்தலில் வெற்றியைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும்ட என்று அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements