சீரான குடிநீா் கோரி ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மருதம்புத்தூரில் 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுக்கு கூடுதலாக தண்ணீா் தொட்டி அமைத்து தினசரி குடிநீா் விநியோகம் செய்யக் கோரி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட நிா்வாகிகள் குணசீலன், பாலு, மகாவிஷ்ணு, நல்லையா, தாலுகா குழு நிா்வாகிகள் கனகராஜ், பரமசிவன், கிளைச் செயலா் பத்திரகாளி உள்பட பலா் கலந்து கொண்டனா்.