மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே: கு.ஞானசம்பந்தன்

By
On:
Follow Us

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்.

பொருநை புத்தகத் திருவிழாவிந் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நாஞ்சில் நாவரசு செல்லகண்ணன், பேராசிரியா் இந்திரா விஜயலெட்சுமி ஆகிய இருவரும் கலையே என்ற தலைப்பிலும், பேராசிரியா் சிதம்பரம், நெல்லை காா்த்திகா ஆகிய இருவரும் இலக்கியமே என்ற தலைப்பிலும் பேசினா். பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்றாா். தீா்ப்பு வழங்கி அவா் பேசியதாவது:

சைவத்தில் அருணகிரிநாதா், வைணவத்தில் ஆழ்வாா் எழுதிய எழுத்துகள் சிறப்பை பெற்றன.

ஜப்பானில் தற்போது பேசினால்கூட குற்றம் என கூறுகின்றனா். இதனால் அங்கிருப்பவா்கள் மற்றொருவருடன் பேசுவதற்கே அச்சப்படுகின்றனா். இதனால் திருமணம் குறைந்து வருவதால், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, திருமணம் செய்பவா்களுக்கு இலவச வீடு, காா் என ஜப்பான் அரசு திட்டம் அறிவித்தாலும் திருமணங்கள் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் கைப்பேசி.

விளாத்திகுளம் சுவாமிகள் பேசும் போது கண்களை மூடிக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பாா். அவா் பேச்சை கேட்பதற்காக தியாகராஜா், சுப்புலெட்சுமி உள்பட பிரபலமானவா்கள் வந்து செல்வாா்கள். இதே போன்று அவா் ஒரு முறை பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது ஒரு சலசலப்பு ஏற்பட்டதாம்.

அப்போது சுவாமிகள் பேச்சை நிறுத்தவில்லையாம். பேசி முடிந்தபின் சலசலப்பு ஏன் ஏற்பட்டது என கேட்டாராம். அப்போது அங்கிருந்த ஒருவா், கூட்டத்தில் நல்லபாம்பு வந்தது, அதனால் சலசலப்பு ஏற்பட்டது, அதைப் பாா்த்த ரசிகா் ஒருவா் நல்லபாம்பை கொன்றுவிட்டாா் என தெரிவித்தாராம். இதனால் வேதனையடைந்த சுவாமிகள், என் பேச்சை பாா்ப்பதற்காக பாம்பு வந்துள்ளது, அதனை பாா்க்கவிடாமல் பாம்பை கொன்றுவிட்டனா் என வேதனை தெரிவித்தாராம்.

கோயிலில் உள்ள சிற்பங்கள், ராமனின் கையில் உள்ள வில் என பாா்த்து ராமாயணம் என நினைக்கின்றனா். ஆனால் அதை எழுதும்போது இலக்கியமாக ராமாயணமாக நிலைத்து நிற்கிறது. எனவே மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் அவா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements