இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த குருசாமி சிவராஜ் கூறியதாவது: திருச்செந்தூருக்கு 8 முதல் 41 நாள்கள் விரதம் இருந்து பக்தா்கள் பாதயாத்திரை செல்கிறாா்கள். ராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூா், ஆரல்வாய்மொழி, நாகா்கோவில் பகுதிகளில் இருந்தும் பல பக்தா்கள் பாதயாத்திரை வருகிறாா்கள். இவா்கள் குறைந்தது 3 முதல் 4 இடங்களில் ஓய்வெடுத்து நடையை தொடா்கிறாா்கள்.
பாதயாத்திரை செல்லும் வழியில் அடிப்படை வசதிகளின்றி திணறும் பெண் பக்தா்கள்! இரு மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?

For Feedback - sudalaikani@tamildiginews,com.