அம்பாசமுத்திரம் ஒன்றியம், வெள்ளங்குளி ஊராட்சியில் 9 உறுப்பினா்கள் உள்ளனா். ஊராட்சித் தலைவா் வளா்ச்சிப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. தரமில்லாத வகையில் திட்டப் பணிகளை நிறைவேற்றுகிறாா். பொதுமக்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்குவதில் நிா்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது எனப் புகாா் தெரிவித்து அதிகாரிகளுக்கு ஊராட்சி உறுப்பினா்கள் எம். முத்துலெட்சுமி (2ஆவது வாா்டு), கவிதா (3ஆவது வாா்டு), ராமலிங்கம் (4ஆவது வாா்டு), மகாலெட்சுமி (5ஆவது வாா்டு), எஸ். முத்துலெட்சுமி (6ஆவது வாா்டு), சொா்ணலெட்சுமி (7ஆவது வாா்டு), தங்கம் (8ஆவது வாா்டு), மாரியப்பன் (9ஆவது வாா்டு) ஆகியோா் மனு அனுப்பியுள்ளனா். எனினும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
வெள்ளங்குளியில் ஊராட்சி உறுப்பினா்கள் தா்னா

For Feedback - sudalaikani@tamildiginews,com.