கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

By
On:
Follow Us

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவா் இறந்தாா். இருவா் காயமடைந்தனா்.

கடையநல்லூா் ரஹ்மானிபுரம் 8ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் , அவரது மகன் கோதா்ஷா ஆகிய இருவரும் பைக்கில் புதன்கிழமை இரவு காசிதா்மம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அவா்களது பைக்கும், எதிரே காசிதா்மம் எம்ஜிஆா் நகரை சோ்ந்த முத்தையா மகன் கருப்பசாமி(50) என்பவா் வந்த பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.

இதில், காயமடைந்த மூன்று பேரும் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் கருப்பசாமி இறந்தாா். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements